Friday, March 3, 2000

எங்கே நிம்மதி?

<> எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம்வேண்டும்! <>  2011-ல், திருவனந்தபுரத்தில் ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் மறைந்திருந்த தங்கக் குவியலைக் கண்டுபிடித்ததன் விளைவுகளை நினைத்து எழுதிய கவிதை கீழே:
 


கத்தும் கடலின் ஒலிதுயிலைக்
.. கலைத்தல் கண்டு காலமெல்லாம்
… கவலையின்றிக் கழிப்பதற்குக் 
…. கார்வண்  ணத்தான் வைகுந்தம்

 ஒத்து வாரா தெனவுணர்ந்த
.. உடனே உலகின் ஓர்முனையில் 
… ஒதுங்கி யிருக்கும் அனந்தபுரம்
…. உகந்த தென்றே தேர்ந்தெடுத்து

 மொத்த மாகப் படுக்கையுடன்
.. முடுகி வந்து பக்தர்பலர்
… முன்னே சொகுசாய்த் தூங்குகையில்
…. மூடி மறைத்து வைத்திருந்த

 சொத்தைக் காட்ட வேண்டுமென்று
.. தோன்றி அவற்றைத் திறந்துவிட,
… தூக்க மெல்லாம் தொலைந்ததம்மா!
…. தொல்லை அவனைச் சூழ்ந்ததம்மா! 

அனந்த் 19-7-2011

No comments: